நாணயம் லைப்ரரி: சிறு துளி பெரு வெள்ளம்!
புத்தகத்தின்
பெயர் : இண்டியா அன் இங்க் (india uninc)
ஆசிரியர் : பேராசிரியர் ஆர். வைத்தியநாதன் (Prof.
R. Vaidyanathan)
பதிப்பாளர் : வெஸ்ட்லாண்ட்
இதில்,
'இன்கார்ப்பரேட்டட்’ (அதாவது, குழுமமாக்கப்பட்டது) என்பது பெரும்பாலும் தனியார்
துறையைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் ஆகும். 'அன் இன்கார்ப்பரேட்டட்' என்பதில் குறு,
சிறு, மத்திய அளவிலான நிறுவனங்கள் அடங்கும். அது தனிநபரை உரிமையாளராகவோ அல்லது
கூட்டு உரிமையாளர் களைக் கொண்டதாகவோ (Proprietorship and Partnership – பி அண்ட்
பி) இருக்கும்.
தனியார் துறையைச்
சேர்ந்த பெரு நிறுவனங்களுக்குத் தரக் கூடிய முக்கியத்துவமும், சலுகை களும்,
வசதிகளும் இன்னொரு பிரிவான 'அன் இங்க்'குக்குத் தரப்படாமலே அனைவராலும் (மத்திய, மாநில அரசுகள்,
நிதி நிறுவனங்கள்) ஒரு இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதைப்
புள்ளிவிவரங் களுடன் சுட்டிக்காட்டி எழுதப் பட்டிருக்கும் புத்தகம்தான் 'இண்டியா
அன் இங்க்'.
இந்தப் புத்தகத்தை
எழுதியிருப் பவர் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் பெங்களூரில் பேராசிரியராகப்
பணிபுரிந்து வரும் ஆர் வைத்திய நாதன்.
`அன் இங்க்’ என
அழைக்கப் படும் இந்த `முறைசாரா’ அல்லது 'பி அண்ட் பி' என்கிற பிரிவில் மட்டும்
2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்குப்படி, சுமார் 4.1 கோடி சிறு நிறுவனங் களுக்கு
மேல் இருக்கின்றன. இதில் 2.5 கோடி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் இருக்கின்றன.
இவற்றில் சுமார் 3.5 கோடி நிறுவனங்கள் விவசாயம் சாராதவை.
இந்தக் குறு, சிறு
நிறுவனங் களின் வளர்ச்சி வருடத்துக்கு 4.69 சதவிகிதம். தேசிய வருமானத்தில் இதன்
பங்களிப்பு சுமார் 45%. ஆனால், `இண்டியா இன்கார்ப்ப ரேட்டட்’ என அழைக்கப்படும்
பெரு நிறுவனங்களின் பங்களிப்பு 15%தான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த `அன்
இங்க்’கின் கீழ் வரக்கூடிய தொழில்கள்தான் என்னென்ன?
1) பதிவு
செய்யப்படாத உற்பத்திக் கூடங்கள், 2) கட்டுமானத் தொழில், 3) வர்த்தகம் – மொத்த
மற்றும் சில்லறை வணிகம், 4) ஹோட்டல் கள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகள், 5) ரயில்வே
தவிர்த்த மற்ற போக்குவரத்து சம்பந்தப்பட்ட தொழில்கள்/செயல்பாடுகள்,
6) ஸ்டோரேஜ் சம்பந்தப்பட்டவை, 7) ரியல் எஸ்டேட், 8) மற்ற சேவைகள்.
6) ஸ்டோரேஜ் சம்பந்தப்பட்டவை, 7) ரியல் எஸ்டேட், 8) மற்ற சேவைகள்.
இந்த `அன் இங்க்’
என்பதை `Non-Corporate’ துறை என்றும் அழைக்கலாம். இதில் நாவிதர், செருப்புத்
தைப்பவர், மரவேலை செய்பவர், பிளம்பர், எலெக்ட்ரிஷியன், கமிஷன் ஏஜென்ட்டுகள்,
சைக்கிள்-ரிக்ஷா இழுப்பவர்கள், சார்ட்டர்டு அக்கவுன்டென்டு கள், கட்டடக் கலை நிபுணர்கள்,
வழக்கறிஞர்கள், பூசாரிகள் என சுயமாக வேலை செய்பவர்களும் அடங்குவார்கள். சொல்லப்
போனால், மேற்குறிப்பிட்ட தொழில் செய்பவர்களை `முறைசாரா’ பிரிவினர் எனக் கூறுவதே
தவறானது. பொருளாதார ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் இந்தத் துறை சிறப்பாகச்
சீரமைக்கப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது.
2005-ல் வெளியான
எக்கனாமிக் சர்வே அறிக்கைப் படி, இந்தத் துறையைச் சேர்ந்த தொழில் மற்றும்
சேவைகளில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடி.
சேமிப்புக் குறித்த
புள்ளிவிவரங்களை அலசினா லும் இந்தத் துறைதான் முன்னணி யில் இருந்தது. 2011-12ம்
ஆண்டு புள்ளிவிவரப்படி, அரசுத் துறை நிறுவனங்களின் சேமிப்பு, மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 1.3%; தனியார் துறை நிறுவனங் களின் சேமிப்பு 7.2%; குடும்பம் சார்ந்த (நம்மைப் போன்ற
சாமானியமானவர்களும், பி அண்ட் பி துறையும்) சேமிப்பு சுமார் 22.3%.
ஆக, தேசிய வருமானத்திலும்,
வேலைவாய்ப்புகளிலும், சேமிப் பிலும் முன்னிலை வகிக்கும் இந்தத் துறைக்கு,
கார்ப்பரேட் என்று சொல்லக்கூடிய தனியார் துறைக்கு அளிக்கப்படுகிற
முக்கியத்துவத்தில் ஓரிரு சத விகிதம்கூட அளிக்கப்படுவ தில்லை என்பதை இந்த புத்தகத்
தின் ஆசிரியர் ஆதங்கத்துடன்
எழுதியிருக்கிறார்.
பங்குச் சந்தையில்
ஏற்றம், இறக்கம் ஏற்படும்போது அந்தத் துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு ரத்த
அழுத்தமும் ஏறி இறங்கும். ஆனால், பங்குச் சந்தை உண்மையிலேயே இந்திய
பொருளாதாரத்தைப் பிரநிதித்து வம் செய்கிறதா என்று கேட்டால், இல்லை என்றே சொல்ல
வேண்டும். இதை ஆசிரியர் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங் களுடன்
குறிப்பிட்டிருக்கிறார்.
`இன்கார்ப்பரேட்டட்’
என்று சொல்லக்கூடிய பிரிவில் சுமார் 7.2 லட்சம் நிறுவனங்கள் (2011 ஆண்டு வரை)
கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் 5,000 முதல் 9,000 நிறுவனங்கள் மட்டுமே பங்குச் சந்தையில்
பட்டியிலிடப் பட்டிருக்கின்றன. இதில் ஏறக்குறைய 3,000 பங்குகள் வருடத்துக்கு
குறைந்தபட்சம் ஒருமுறையாவது பரிவர்த்தனை செய்யப்படுகின்றன.
சுமாராக 100
பங்குகள் மட்டும்தான் பங்குச் சந்தையில் மிகவும் தீவிரமாகப் பரிவர்த்தனை
செய்யப்படுகின்றன. இதில் 50 பங்குகளின் பரிவர்த்தனை மதிப்பு பங்குச் சந்தை
பரிவர்த் தனையில் 65 சதவிகிதமாகும். ஆனால் அரசும், அனைத்து ஊடகங்களும் இந்தப்
பிரிவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
இந்திய மக்களின்
வாழ்க்கை யில் முக்கிய அங்கம் வகிக்கும் சினிமாவும், கிரிக்கெட்டும்கூட `அன்
இங்க்’ பிரிவைச் சேர்ந்ததுதான். சமீப காலமாகத் தான் சினிமாப் படம் எடுப்பதில் சில
`கார்ப்பரேட்’கள் நுழைந்திருக் கின்றன. பிசிசிஐ (BCCI – Board of Control for
Cricket in India) ஒரு `சாரிட்டபிள்” அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டதால், வருமான
வரித் துறை வரிச் சலுகை தந்து வந்தது. ஆனால், சமீபத்தில் இந்தச் சலுகையை வருமான
வரித் துறை திரும்பப் பெற்றுக் கொண்டது. பிசிசிஐதான் உலகத்திலேயே அதிக வருமானம்
கொண்ட கிரிக்கெட் போர்டு. இதன் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு மேல்.
ஆனாலும், இது `அன் – இன்கார்ப்பரேட்’ பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது
விந்தைதான்!
அன் இங்க் பிரிவின்
கீழ் இருக்கும் அமைப்புகளுக்கு வங்கிகள் தொழில் அபிவிருத்திக்கு கடன் கொடுக்கத்
தயங்குகின்றன. இதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பு
இல்லை. என்னதான் தேசிய வருமானத்துக்கு இந்தப் பிரிவு அதிகப் பங்களிப்புச்
செய்தாலும், இதற்கென்று தீர்க்கமான கொள்கைகளை அரசு வகுக்காத தால் இந்தத் துறை வளர
முடியாமல் தவிக்கிறது.
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் முதலீடு செய்ய
பன்னாட்டு சில்லறை வணிக நிறுவனங்கள் துடித்துக் கொண்டிருக்கக் காரணம், தேசிய மொத்த
உற்பத்தியில் இதன் பங்கு 17% ஆகும் (விவசாயத் துறை 14.6%, , உற்பத்தித் துறை
13.2%). ஆனால், இன்னும் இந்தத் துறைக்கு `இண்டஸ்ட்ரி’ என்கிற அந்தஸ்தை அரசு
வழங்கவில்லை. சில்லறை மற்றும் மொத்த வணிகம் சார்ந்த தொழிலில்
ஈடுபட்டிருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3 கோடி (2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி)!
`அன் இங்க்’ பிரிவு
நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், அதற்கு என்ன செய்ய
வேண்டுமென்பது குறித்தும் புள்ளிவிவரங்களுடன் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகம்
இதுவாகவே இருக்கும்.
எளிமையாகத் தோற்றம்
அளிக்கும் இந்தப் பிரிவும் விவசாயத் துறையும் (தேசிய வருமானத்தில் இதன் பங்கு 17
சதவிகிதம்) உண்மையிலேயே வலிமை மிக்கவை ஆகும். வலிமை மிக்கதாகத் தோற்றத்தை
ஏற்படுத்தியிருக்கும் இந்தியா `இன்கார்ப்பரேட்டட்’ (தனியார் துறை) ஒரு காற்றடைத்த
பலூன் தான் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும்.
மத்திய, மாநில
அரசுகளின் கடைக்கண் பார்வை இந்த `அன்–இங்க்’ பிரிவைச் சேர்ந்த தொழில்களின் மேல்
பட்டால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் வலிமை பெறும். இன்று சிறு துளியாக இருக்கும்
நம் வளர்ச்சி பெரு வெள்ளமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
(குறிப்பு: இந்தப்
புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)