அவுட்லயர்ஸ் : தமிழில் சித்தார்த்தன் சுந்தரம்
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 49
என் பாட்டி டெய்ஸி நேஷன் ஜமைக்காவின் வடமேற்கிலிருந்து வந்தவர். அவருடைய தாத்தாவின் அப்பா பெயர் வில்லியம் ஃபோர்ட். அவர் அயர்லாந்திலிருந்து ஜமைக்காவிற்கு 1784-ல் வந்தவர். அதற்குப் பிறகு அங்கு ஒரு காப்பித் தோட்டம் வாங்கினார். சில நாட்கள் கழித்து ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி தன்னுடைய ஆசைநாயகியாக ஆக்கிக் கொண்டார்.
அந்தப் பெண்ணை அலிகேட்டர் பாண்ட் என்கிற ஒரு மீனவ கிராமத்தில்தான் பார்த்தார். அவள் மேற்கு ஆப்பிரிக்க மலைஜாதி வம்சமான இக்போ இனத்தைச் சேர்ந்தவள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் ஜான் என பெயரிட்டார்கள். அவன் ஒரு 'முலாட்டோ’... அதாவது 'நிறம் கொண்டவன்’ என்று பொருள். அந்த காலகட்டத்திலிருந்து வில்லியம் ஃபோர்ட் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் ஜமைக்கன் 'கலர்டு’ வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.
அதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவில், வெள்ளையர் ஒருவர் அடிமை ஒருத்தியுடன் அனைவரும் அறியும்படி உறவு வைத்திருப்பது என்பதே மிகவும் அரிதான தாகும். வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் இடையேயான செக்ஸ் உறவு ஒழுக்கக் குற்றம் என கருதப்பட்ட காலம் அது. இதற்காக சட்டம்கூட அமலாக்கப்பட்டது. இது 1967 வரை அமலில் இருந்தது.
ஒரு தோட்டத்தின் அதிபர், ஒரு அடிமையுடன் அனைவருக்கும் தெரியும் வகையில் குடும்பம் நடத்தி வந்தால் அவர் சமூகத்தால் தள்ளி வைக்கப்படுவார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஆனால், ஜமைக்காவிலோ இதற்கான அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. அந்த கரீபிய நாடு கிட்டத்தட்ட ஒரு அடிமைகளின் காலனி போலதான் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு 1 வெள்ளையர் என்கிற விகிதாசாரம்... அதாவது, கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், திருமண வயதில் இருந்த வெள்ளை யின பெண்கள் மிக, மிகக் குறைவு. இதனால் வெள்ளையர்களில் பெரும்பாலானோர் கறுப்பு அல்லது கோதுமை நிறத்திலிருக்கும் பெண்களை தங்களின் 'துணையாக’ வைத்துக் கொண்டனர்.
ஒரு பிரிட்டிஷ் தோட்ட அதிபர் அவருடைய பாலியல் அனுபவம் பற்றி தனது டயரியில் குறித்து வைத்திருந்தார். அதன்படி அவர் அங்கிருந்த 37 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 138 பெண்களுடன் உறவு கொண்டிருந்தார்.
வெள்ளையர்கள் ஒரு கட்டத்தில் 'முலாட்டோ’க்களை தங்களது கூட்டாளிகளாக கருத ஆரம்பித்தனர். காரணம், இவர்கள் எல்லோரும் வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் பிறந்தவர்கள். இதனால் முலாட்டோ பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கிராக்கி இருந்தது. இவர் களுடைய குழந்தைகள் கறுப்பினக் குழந்தைகளைவிட நிறத்தில் கொஞ்சம் 'தூக்கலாக’ இருந்தனர். இதனால் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தில் கொஞ்சம் உயரத்தில் இருந்தனர்.
வயலில் பாடுபட்டு வேலை பார்க்கும் முலாட்டோக்களைப் பார்ப்பது மிகவும் அரிது. அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருந்தது. அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதோடு சரி. அவர்கள் மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். வெள்ளையினத்தைச் சேர்ந்த தோட்ட அதிபர்கள் தங்களுடைய உயிலில் தங்களது 'முலாட்டோ’ துணைகளுக்கு அதிகமான சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். இதை அறிந்த ஜமைக்கா அரசாங்கம் இந்த சொத்துக்கள் அதிகபட்சமாக 2,000 பவுண்டுகள்தான் (அந்தக் காலத்திற்கு இந்தத் தொகையே மிக மிக அதிகம்) இருக்கலாம் என சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்தது.
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் தனது குறிப்பில், 'மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஐரோப்பியர்கள் அங்கு அதிக நாட்கள் தங்க உத்தேசிக்கும் வேளையில், அவர்களுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு 'ஹவுஸ்கீப்பர்’ அல்லது 'துணை’ தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு கறுப்பினத்தவர், டானே, முலாட்டோ அல்லது மெஸ்டி என பல இனத்தைச் சேர்ந்தவர்கள் 100 அல்லது 150 ஸ்டெர்லிங்கிற்குக் கிடைத்தார்கள். நிற வேற்றுமை கொண்ட சந்ததிகளின் குழந்தைகளுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைத்தது. இவர்களில் பெரும்பாலோர் அவர்களுடைய மூன்றாவது அல்லது நான்காவது வயதில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர்' என்று கூறுகிறார்.
இந்த மாதிரியான காலகட்டத் தில்தான் என் பாட்டியின் தந்தை டெய்ஸினுடைய தாத்தா ஜான் பிறந்து வளர்ந்தார். இவர் சுதந்திரமாகவும், கல்விக்கான அனைத்து வசதிகளும் பெற்றிருந்தார். இவர் ஒரு முலாட்டோவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஐரோப்பியர் ஒருவருக்கும், ஆராவக் என்கிற ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர். இவர்களுக்கு 7 குழந்தைகள் இருந்தனர்.
'இவர்களுக்கு இந்த இடைப்பட்ட நிறத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்து அதிகமாக இருந்தது' என ஜமைக்காவைச் சேர்ந்த ஓர்லாண்டோ பாட்டர்ஸன் என்கிற சமூகவியலாளர் கூறுகிறார். மேலும் அவர், '1826-க்கு முன்பே அவர்களுக்கு முழுமையான சிவில் லிபர்டி இருந்தது. அதாவது, அந்த நேரத்தில் ஜமைக்காவில் யூதர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்ததோ, அவ்வளவு அதிகாரம் இவர்களுக்கும் இருந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. வெள்ளை இனத்தவர்கள் செய்த அத்தனை விஷயங்களையும் இவர்கள் செய்தார்கள். ஜமைக்கா அடிமைச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த வேளையில்கூட அவர்களுக்கு இது சாத்தியமாக இருந்தது.
ஜமைக்காவில் அதிகமாக கரும்புத் தோட்டங்கள் இருந்தன. இது தென் அமெரிக்காவில் இருந்த பருத்தி தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. செடியிலிருந்து பருத்தியை எடுத்து பிராஸஸ் செய்வதற்கு லங்காஷைர் அல்லது வடக்கில் உள்ள மற்ற இடங்களுக்கு அனுப்புவார்கள். ஆனால், கரும்பு பயிரிடும்போது இதற்கு தொழிற்சாலை பக்கத்திலேயே இருக்க வேண்டும். காரணம், வயலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரும்பு அதில் உள்ள சர்கோஸ்ஸை இழந்துவிடும். கரும்பு பிழியும் தொழிற்சாலை அருகேயே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கரும்புத் தொழிற்சாலைக்குப் பல்வேறுபட்ட தொழில் தெரிந்தவர்கள் தேவைப்பட்டது. பேரல் தயாரிப்பவர்கள், பாய்லர் வேலை தெரிந்தவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் என பலவகையான தொழில் தெரிந்தவர்கள் தேவைப் பட்டனர். இந்த வேலைகளை கறுப்பினத்தவர்கள் செய்து வந்தனர்.
ஜமைக்காவில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் போல நாட்டை வளப்படுத்துவதில் அதிகமாக அக்கறை காட்டவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிப் போகவே விருப்பப்பட்டனர். அவர்கள் ஜமைக்காவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்ப வில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு கலகக்கார நாடாகவே இருந்தது. இதனால் புதிய சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு புதிதாக உருவான மற்ற இனத்தவர்களின் மேல் விழுந்தது.
1850 வாக்கில் ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன்னுக்கு வேறொரு 'நிறம்' கொண்டவர் மேயர் ஆனார். அதேபோல் ஜமைக்கா நாட்டின் 'டெய்லி கிளெனர்’ என்கிற பிரபல தினசரியின் ஸ்தாபகரும் வேறு நிறத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இதுபோல பல புரபஷனல் துறைகளில் இவர்கள் தலை தூக்க ஆரம்பித்தனர். வெள்ளையர்கள் பிஸினஸ்மேன்களாகவோ அல்லது தோட்ட அதிபர் களாகவோ இருந்தார்கள். மற்ற நிறத்தைச் சார்ந்தவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள், ஆசிரியர்களாக ஆனார்கள்.
கடந்த அத்தியாயத்தில் நான் சொன்ன கிங்ஸ்டன் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கோதுமை நிறத்தைச் சார்ந்தவர். இவரும் இவர் நிறத்தைச் சார்ந்தவர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்த அந்தஸ்தில் இல்லை என்றாலும், கலாசார ரீதியில் நல்ல அந்தஸ்தில் இருந்தனர்.
மேலே உள்ள அட்டவணையில் 1950-களில் இருந்த இரண்டு வகையான ஜமைக்கன் புரபஷனல்கள்... அதாவது, வக்கீல்கள் மற்றும் எம்.பி.க்கள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தோலினுடைய நிறத்தைப் பொறுத்தது. 'ஒயிட் அண்ட் லைட்’ வகையைச் சேர்ந்தவர்கள் ஒன்று முழுவதுமாக வெள்ளை இனத்தினர் அல்லது கொஞ்சம் கறுப்பின பாரம்பரியம் கொண்டவர்கள். 'ஆலிவ்’ நிறத்தவர்கள் ஒயிட்டிற்கு ஒரு படி கீழே... 'லைட் பிரௌன்’ நிறத்தவர்கள் ஆலிவ் நிறத்தவர்களுக்கு ஒரு படி கீழே (ஆனால், இந்த இரண்டு நிறத்தவர்களையும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வது ஜமைக்கர் களைத் தவிர மற்றவர்களுக்குக் கடினம்.)
அட்டவணையைப் பார்க்கும்போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், 1950-களில் ஜமைக்கா மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்கள் 80 சதவிகிதத்தினர். இது 5-க்கு 1 என்கிற விகிதாசாரத்தில் இருந்த மற்ற எல்லா நிறத்தினரையும்விட மிக அதிகம்.
கொஞ்சம் வெள்ளை நிறம் சேர்ந்ததினால் 'கலர்டு’ மைனாரிட்டிக்கு ஏற்பட்ட அசாதாரண நன்மையைப் பாருங்கள். வயலில் வேலை பார்க்காமல் வீட்டில் மட்டும் வேலை பார்த்தவர்களுக்கு 1826-லியே சிவில் உரிமைகள் கிடைத்தன. அவர்கள் மதிப்பு மிக்கவர்களாக கருதப்பட்டார் கள். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்காமல் அறிவு மற்றும் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ள வேலையில் ஈடுபட்டனர். இவையனைத்தும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் கழித்து தொழில் ரீதியில் பெற்ற பெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
இந்த வழியில் வந்த எனது மூதாதையர் குடும்பம் மட்டும் எப்படி வேறுவிதமாக இருந்திருக்க முடியும்?
(அடுத்த இதழுடன் நிறைவு பெறும்)
Copyright © 2008 by Malcolm Gladwell
ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 49
என் பாட்டி டெய்ஸி நேஷன் ஜமைக்காவின் வடமேற்கிலிருந்து வந்தவர். அவருடைய தாத்தாவின் அப்பா பெயர் வில்லியம் ஃபோர்ட். அவர் அயர்லாந்திலிருந்து ஜமைக்காவிற்கு 1784-ல் வந்தவர். அதற்குப் பிறகு அங்கு ஒரு காப்பித் தோட்டம் வாங்கினார். சில நாட்கள் கழித்து ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி தன்னுடைய ஆசைநாயகியாக ஆக்கிக் கொண்டார்.
அந்தப் பெண்ணை அலிகேட்டர் பாண்ட் என்கிற ஒரு மீனவ கிராமத்தில்தான் பார்த்தார். அவள் மேற்கு ஆப்பிரிக்க மலைஜாதி வம்சமான இக்போ இனத்தைச் சேர்ந்தவள். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அவர்கள் ஜான் என பெயரிட்டார்கள். அவன் ஒரு 'முலாட்டோ’... அதாவது 'நிறம் கொண்டவன்’ என்று பொருள். அந்த காலகட்டத்திலிருந்து வில்லியம் ஃபோர்ட் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் ஜமைக்கன் 'கலர்டு’ வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள்.
அதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவில், வெள்ளையர் ஒருவர் அடிமை ஒருத்தியுடன் அனைவரும் அறியும்படி உறவு வைத்திருப்பது என்பதே மிகவும் அரிதான தாகும். வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் இடையேயான செக்ஸ் உறவு ஒழுக்கக் குற்றம் என கருதப்பட்ட காலம் அது. இதற்காக சட்டம்கூட அமலாக்கப்பட்டது. இது 1967 வரை அமலில் இருந்தது.
ஒரு தோட்டத்தின் அதிபர், ஒரு அடிமையுடன் அனைவருக்கும் தெரியும் வகையில் குடும்பம் நடத்தி வந்தால் அவர் சமூகத்தால் தள்ளி வைக்கப்படுவார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் அடிமை இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
ஆனால், ஜமைக்காவிலோ இதற்கான அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது. அந்த கரீபிய நாடு கிட்டத்தட்ட ஒரு அடிமைகளின் காலனி போலதான் இருந்தது. பத்துக்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு 1 வெள்ளையர் என்கிற விகிதாசாரம்... அதாவது, கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், திருமண வயதில் இருந்த வெள்ளை யின பெண்கள் மிக, மிகக் குறைவு. இதனால் வெள்ளையர்களில் பெரும்பாலானோர் கறுப்பு அல்லது கோதுமை நிறத்திலிருக்கும் பெண்களை தங்களின் 'துணையாக’ வைத்துக் கொண்டனர்.
ஒரு பிரிட்டிஷ் தோட்ட அதிபர் அவருடைய பாலியல் அனுபவம் பற்றி தனது டயரியில் குறித்து வைத்திருந்தார். அதன்படி அவர் அங்கிருந்த 37 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 138 பெண்களுடன் உறவு கொண்டிருந்தார்.
வெள்ளையர்கள் ஒரு கட்டத்தில் 'முலாட்டோ’க்களை தங்களது கூட்டாளிகளாக கருத ஆரம்பித்தனர். காரணம், இவர்கள் எல்லோரும் வெள்ளையர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் பிறந்தவர்கள். இதனால் முலாட்டோ பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கிராக்கி இருந்தது. இவர் களுடைய குழந்தைகள் கறுப்பினக் குழந்தைகளைவிட நிறத்தில் கொஞ்சம் 'தூக்கலாக’ இருந்தனர். இதனால் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தில் கொஞ்சம் உயரத்தில் இருந்தனர்.
வயலில் பாடுபட்டு வேலை பார்க்கும் முலாட்டோக்களைப் பார்ப்பது மிகவும் அரிது. அவர்களுடைய வாழ்க்கை எளிதாக இருந்தது. அவர்கள் வீட்டில் வேலை பார்ப்பதோடு சரி. அவர்கள் மிகவும் சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்து வந்தனர். வெள்ளையினத்தைச் சேர்ந்த தோட்ட அதிபர்கள் தங்களுடைய உயிலில் தங்களது 'முலாட்டோ’ துணைகளுக்கு அதிகமான சொத்துக்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றனர். இதை அறிந்த ஜமைக்கா அரசாங்கம் இந்த சொத்துக்கள் அதிகபட்சமாக 2,000 பவுண்டுகள்தான் (அந்தக் காலத்திற்கு இந்தத் தொகையே மிக மிக அதிகம்) இருக்கலாம் என சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டு வந்தது.
18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் தனது குறிப்பில், 'மேற்கிந்திய தீவுகளுக்கு வரும் ஐரோப்பியர்கள் அங்கு அதிக நாட்கள் தங்க உத்தேசிக்கும் வேளையில், அவர்களுக்கு வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு 'ஹவுஸ்கீப்பர்’ அல்லது 'துணை’ தேவைப்பட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்கு கறுப்பினத்தவர், டானே, முலாட்டோ அல்லது மெஸ்டி என பல இனத்தைச் சேர்ந்தவர்கள் 100 அல்லது 150 ஸ்டெர்லிங்கிற்குக் கிடைத்தார்கள். நிற வேற்றுமை கொண்ட சந்ததிகளின் குழந்தைகளுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்து கிடைத்தது. இவர்களில் பெரும்பாலோர் அவர்களுடைய மூன்றாவது அல்லது நான்காவது வயதில் படிப்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர்' என்று கூறுகிறார்.
இந்த மாதிரியான காலகட்டத் தில்தான் என் பாட்டியின் தந்தை டெய்ஸினுடைய தாத்தா ஜான் பிறந்து வளர்ந்தார். இவர் சுதந்திரமாகவும், கல்விக்கான அனைத்து வசதிகளும் பெற்றிருந்தார். இவர் ஒரு முலாட்டோவைத் திருமணம் செய்து கொண்டார். இந்தப் பெண் ஐரோப்பியர் ஒருவருக்கும், ஆராவக் என்கிற ஜமைக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர். இவர்களுக்கு 7 குழந்தைகள் இருந்தனர்.
'இவர்களுக்கு இந்த இடைப்பட்ட நிறத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் அந்தஸ்து அதிகமாக இருந்தது' என ஜமைக்காவைச் சேர்ந்த ஓர்லாண்டோ பாட்டர்ஸன் என்கிற சமூகவியலாளர் கூறுகிறார். மேலும் அவர், '1826-க்கு முன்பே அவர்களுக்கு முழுமையான சிவில் லிபர்டி இருந்தது. அதாவது, அந்த நேரத்தில் ஜமைக்காவில் யூதர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருந்ததோ, அவ்வளவு அதிகாரம் இவர்களுக்கும் இருந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை இருந்தது. வெள்ளை இனத்தவர்கள் செய்த அத்தனை விஷயங்களையும் இவர்கள் செய்தார்கள். ஜமைக்கா அடிமைச் சமூக அமைப்பைக் கொண்டிருந்த வேளையில்கூட அவர்களுக்கு இது சாத்தியமாக இருந்தது.
ஜமைக்காவில் அதிகமாக கரும்புத் தோட்டங்கள் இருந்தன. இது தென் அமெரிக்காவில் இருந்த பருத்தி தோட்டங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது. செடியிலிருந்து பருத்தியை எடுத்து பிராஸஸ் செய்வதற்கு லங்காஷைர் அல்லது வடக்கில் உள்ள மற்ற இடங்களுக்கு அனுப்புவார்கள். ஆனால், கரும்பு பயிரிடும்போது இதற்கு தொழிற்சாலை பக்கத்திலேயே இருக்க வேண்டும். காரணம், வயலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரும்பு அதில் உள்ள சர்கோஸ்ஸை இழந்துவிடும். கரும்பு பிழியும் தொழிற்சாலை அருகேயே இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
கரும்புத் தொழிற்சாலைக்குப் பல்வேறுபட்ட தொழில் தெரிந்தவர்கள் தேவைப்பட்டது. பேரல் தயாரிப்பவர்கள், பாய்லர் வேலை தெரிந்தவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் என பலவகையான தொழில் தெரிந்தவர்கள் தேவைப் பட்டனர். இந்த வேலைகளை கறுப்பினத்தவர்கள் செய்து வந்தனர்.
ஜமைக்காவில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள் போல நாட்டை வளப்படுத்துவதில் அதிகமாக அக்கறை காட்டவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பிப் போகவே விருப்பப்பட்டனர். அவர்கள் ஜமைக்காவிலேயே தொடர்ந்து வசிக்க விரும்ப வில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு கலகக்கார நாடாகவே இருந்தது. இதனால் புதிய சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு புதிதாக உருவான மற்ற இனத்தவர்களின் மேல் விழுந்தது.
1850 வாக்கில் ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன்னுக்கு வேறொரு 'நிறம்' கொண்டவர் மேயர் ஆனார். அதேபோல் ஜமைக்கா நாட்டின் 'டெய்லி கிளெனர்’ என்கிற பிரபல தினசரியின் ஸ்தாபகரும் வேறு நிறத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இதுபோல பல புரபஷனல் துறைகளில் இவர்கள் தலை தூக்க ஆரம்பித்தனர். வெள்ளையர்கள் பிஸினஸ்மேன்களாகவோ அல்லது தோட்ட அதிபர் களாகவோ இருந்தார்கள். மற்ற நிறத்தைச் சார்ந்தவர்கள் வக்கீல்கள், டாக்டர்கள், ஆசிரியர்களாக ஆனார்கள்.
கடந்த அத்தியாயத்தில் நான் சொன்ன கிங்ஸ்டன் தேவாலயத்தைச் சேர்ந்த பாதிரியார் கோதுமை நிறத்தைச் சார்ந்தவர். இவரும் இவர் நிறத்தைச் சார்ந்தவர்களும் பொருளாதார ரீதியில் உயர்ந்த அந்தஸ்தில் இல்லை என்றாலும், கலாசார ரீதியில் நல்ல அந்தஸ்தில் இருந்தனர்.
மேலே உள்ள அட்டவணையில் 1950-களில் இருந்த இரண்டு வகையான ஜமைக்கன் புரபஷனல்கள்... அதாவது, வக்கீல்கள் மற்றும் எம்.பி.க்கள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு தோலினுடைய நிறத்தைப் பொறுத்தது. 'ஒயிட் அண்ட் லைட்’ வகையைச் சேர்ந்தவர்கள் ஒன்று முழுவதுமாக வெள்ளை இனத்தினர் அல்லது கொஞ்சம் கறுப்பின பாரம்பரியம் கொண்டவர்கள். 'ஆலிவ்’ நிறத்தவர்கள் ஒயிட்டிற்கு ஒரு படி கீழே... 'லைட் பிரௌன்’ நிறத்தவர்கள் ஆலிவ் நிறத்தவர்களுக்கு ஒரு படி கீழே (ஆனால், இந்த இரண்டு நிறத்தவர்களையும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்வது ஜமைக்கர் களைத் தவிர மற்றவர்களுக்குக் கடினம்.)
அட்டவணையைப் பார்க்கும்போது நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், 1950-களில் ஜமைக்கா மக்கள் தொகையில் கறுப்பினத்தவர்கள் 80 சதவிகிதத்தினர். இது 5-க்கு 1 என்கிற விகிதாசாரத்தில் இருந்த மற்ற எல்லா நிறத்தினரையும்விட மிக அதிகம்.
கொஞ்சம் வெள்ளை நிறம் சேர்ந்ததினால் 'கலர்டு’ மைனாரிட்டிக்கு ஏற்பட்ட அசாதாரண நன்மையைப் பாருங்கள். வயலில் வேலை பார்க்காமல் வீட்டில் மட்டும் வேலை பார்த்தவர்களுக்கு 1826-லியே சிவில் உரிமைகள் கிடைத்தன. அவர்கள் மதிப்பு மிக்கவர்களாக கருதப்பட்டார் கள். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்காமல் அறிவு மற்றும் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புள்ள வேலையில் ஈடுபட்டனர். இவையனைத்தும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் கழித்து தொழில் ரீதியில் பெற்ற பெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
இந்த வழியில் வந்த எனது மூதாதையர் குடும்பம் மட்டும் எப்படி வேறுவிதமாக இருந்திருக்க முடியும்?
(அடுத்த இதழுடன் நிறைவு பெறும்)
Copyright © 2008 by Malcolm Gladwell



