Saturday, October 8, 2011

Outliers_46

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 46

பள்ளிக்கூட நாட்களில் ஏழைக் குழந்தைகள் வசதியான குடும்பத்து குழந்தைகளைவிட நன்றாகப் படித்தாலும், கோடை விடுமுறையினால் பின்தங்கி விடுகிறார்கள்!

சதிக்கும் வறுமைக்கும் இடையே அமெரிக்காவின் கோடை விடுமுறை நாட்கள் எப்படி எல்லாம் படிப்பில் விளைவுகளை உண்டாக்குகிறது என்பதற்கான புள்ளி விவரங் களைத் திரட்டியபோது ஆச்சரி யமான முடிவுகள் கிடைத்தன. 
வசதியான குடும்பத்தில் பிறந்த மாணவர்களுடைய படிக்கும் திறன் செப்டம்பர் மாதத் தேர்வில் 15 புள்ளி களுக்கும் மேலாக இருக்கிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களின் படிக்கும் திறன் விடுமுறையிலிருந்து திரும்பும் போது 4 புள்ளிகள் குறைந்து விட்டன. ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கூட நாட்களில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்களைவிட நன்றாகவே படித்திருந்தார்கள். ஆனால், கோடை விடுமுறையில் அவர்கள் மிகவும் பின்தங்கிவிடுகிறார்கள். அதாவது, பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் ஏழை மாணவர்கள் படிப்பு அல்லது கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக மிகக் குறைவு என்பது தெரிய வருகிறது.

கிறிஸ் லாங்கன் பற்றி நாம் பார்த்த அத்தியாயத்தில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்முறை பற்றி படித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். வளர்ப்பு முறையில் உள்ள வேறுபாடுகள் கல்வி சம்பந்த மான விஷயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் 9வயதானஅலெக்ஸ் வில்லியம்ஸ் பற்றி படித்ததை நினைவூட்டிக் கொள்ளுங்கள். அவனுடைய பெற்றோர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்ட வளர்ப்பு முறையில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதன்படி அவனை மியூசியத்திற்கு அழைத்துச் சென்றார்கள்; பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்தார்கள்; கோடைகால சிறப்பு முகாம்களில் பங்குபெற வைத்தார்கள். இதனால் அலெக்ஸ் கோடை விடுமுறையில் எவ்வளவு நன்றாக கணிதப் பாடம் படித்தி ருப்பான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?  

ஆனால், இதேபோல் நாம் முன்பே பார்த்த கேட்டி பிரிண்ட்லின் கதை இதற்கு நேர்மாறு. அவளைக் கோடைகால முகாம்களுக்கு அனுப்ப பெற்றோரிடம் போதுமான பணமில்லை. அவளை அவளுடைய அம்மா எந்தவொரு பிரத்யேக வகுப்பிற்கும் காரில் அழைத்துச் சென்றதில்லை; அவளுக்குப் போரடித்தால் படிக்க வீடெங்கும் புத்தகங்கள் பரப்பிக் கிடக்கவில்லை. ஒருவேளை, அதிகபட்சம் தொலைகாட்சிப் பெட்டி இருந்திருக்கலாம். அவளுடைய கோடை விடுமுறை புதிய நண்பர்களுடன் தொடர்பு, விளையாட்டு, திரைப்படம் என கழிந்தது. ஆனால், இது அவளுடைய கணிதம் மற்றும் படிக்கும் திறனை மேம்படுத்த  உதவவில்லை. இந்த இரண்டு விஷயங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு கோடை விடுமுறையும் அவளை அலெக்ஸிற்குப் பின்னேயே தள்ளியது. அலெக்ஸ் கேட்டியை விட ஸ்மார்ட்டாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவன் அவளைவிட நன்கு படிக்கிறான், அவ்வளவுதான்.  

அலெக்ஸாண்டருடைய ஆய்விலிருந்து தெரிய வருவது, அமெரிக்காவில் கல்வித் துறை பற்றிய விவாதம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பதுதான். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை  குறைப்பது, பாடத் தொகுப்பை மாற்றி அமைப்பது, ஒவ்வொரு மாணவனுக்கும் புதிய லாப்டாப் வாங்குவது, பள்ளிக்கூடத்திற்குச் செலவிடும் தொகையை (ஃபண்ட்) அதி கரிப்பது என்பவை பற்றிதான் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதிலிருந்து பள்ளிக்கூடங் களின் செயல் பாட்டைப் பொறுத்தவரை அடிப்படையில் எங்கோ தவறு இருக்கிறது என்பது புரிகிறது.
இதைக் கருத்தில் கொண்டு அலெக்ஸாண்டர் பால்டிமோர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருடம் முழுவதும் பள்ளிக்குச் சென்றால் எப்படியிருக்கும் என ஒரு கணம் யோசித்துப் பார்த்தார். அவருடைய கணக்குப்படி, ஏழை மற்றும் பணக்கார மாணவர்களின் கணிதம் மற்றும் படிக்கும் திறனுக்கான மதிப்பெண்கள் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதுதான்.
  
இதன் மூலம் ஆசிய நாட்டினர் எப்படி கணிதத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கான காரணங்களை இன்னும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. ஆசிய நாட்டில் உள்ள மாணவர் களுடைய கோடை விடுமுறை அதிக நாட்கள் இல்லை. ஏன்?
பள்ளி இருந்தாலும், இல்லா விட்டாலும் சீதோஷ்ண நிலையின்படி வருடத்திற்கு 360 நாட்கள் அதிகாலையில் எழுந்திருக்கிறார்கள் அவர்கள். தங்களுடைய குழந்தைகளுக்குத் தொடர்ந்து மூன்று மாதம் கோடை விடுமுறை இருப்பதைப் பெரும்பாலான ஆசிய நாடுகளில் அனுமதிப்பது இல்லை. இது அவர்கள் கலாசாரம். அமெரிக்காவில் வருடத்திற்கு மொத்தமே 180 நாட்கள்தான் பள்ளிக்கூடம். தென் கொரியாவில் 220 நாட்கள், ஜப்பானிலோ 243 நாட்கள்!

உலகம் தழுவிய அளவில் சமீபத்தில் நடந்த தேர்வில் பங்கு கொண்ட மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் அல்ஜீப்ரா, கால்குலஸ் மற்றும் ஜியாமிட்டரி பற்றிய கேள்விகளில் எத்தனை கேள்விகள் அவர்கள் ஏற்கெனவே படித்திருக்கிறார்கள் என்பதுவும் ஒன்று. ஜப்பானில் 12-வது கிரேடு படிக்கும் மாண வர்கள் '92%’ பேர் ஏற்கெனவே படித்திருப்பதாக பதிலளித்தனர். இதுதான் வருடத்திற்கு 243 நாட்கள் பள்ளிக்குச் செல்வதில் கிடைக்கும் பயன். நீங்கள் எவ்வளவு படிக்க வேண்டுமோ அவ்வளவிற்கு நேரம் இருக்கிறது. படித்ததை மறப்பதற்கான கால இடைவெளி குறைவு! அதே கேள்விக்கு அமெரிக்கர்களில் '54%' பேர்தான் ஏற்கெனவே படித்திருப்பதாகச் சொன்னார்கள்.  ஏழை மாணவர்களைப் பொறுத்த வரை அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பது என்பது பெரிய பிரச்னை இல்லை. ஆனால், கோடை விடுமுறை அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இருந்தது.

அப்பிரச்னையைத் தீர்க்கும் வகையில் ஆரம்பிக்கப் பட்டதுதான் நாம் பார்த்த 'கிப்' பள்ளிகள். 'நெற்பயிர் வயல்கள்’ கற்றுக் கொடுத்த பாடத்தை அமெரிக்காவில் சிறிய நகரங்களுக்கு கொண்டு வர முடிவு செய்தனர்.  
கிப் பள்ளிகள் குறித்து, 'பிரான்க்ஸ் கிப் அகாடமி'யைச் சேர்ந்த டேவிட் லெவின் என்பவர் கூறும்போது, ''பள்ளிக்கூடம் காலை 7.25-க்கெல்லாம் ஆரம்பித்துவிடும். மாணவர் களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்காக 7.55 வரை நடத்தப்படும் ஒரு கோர்ஸில் கலந்து கொள்வார்கள். அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஐந்தாம் கிரேடு தவிர்த்து மற்றவர்களுக்கு 90 நிமிடங்கள் ஆங்கிலம், 90 நிமிடங்கள் கணிதப் பாடங்கள் நடத்தப்படும்.
ஐந்தாம் கிரேடு மாணவர் களுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கணிதப் பாடம் நடத்தப்படும். ஒரு மணி நேரம் அறிவியல், ஒரு மணி நேரம் சோஷியல் சயின்ஸ், வாரத்திற்கு இரண்டு முறை ஒரு மணி நேரத்திற்கு இசைப் பயிற்சி... இதற்கும் மேல் ஆர்கெஸ்ட்ரா பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் ஆர்கெஸ்ட்ராவில் பங்கு பெற்றாக வேண்டும்'' என்று விளக்குகிறார்.  

தினமும் பள்ளிக்கூடம் காலை 7.25-லிருந்து மாலை 5 மணி வரை நடக்கும். அதற்குப் பிறகு வீட்டுப் பாடம், விளையாட்டு போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். இரவு 7 மணி வரையில் மாணவர்கள் பள்ளியிலேயே இருப்பார்கள். மதிய சாப்பாடு, இடைவேளை என அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வழக்கமான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட இவர்கள் 50-லிருந்து 60 சதவிகித நேரம் அதிக நேரம் படிக்கிறார்கள்!  

கிப் பள்ளிகள் பற்றி என்னிடம் அறிமுகப்படுத்திய டேவிட் லெவினை நான் பார்க்கப்போனபோது, அந்தப் பள்ளிக் கூடத்தின் பிரதான வராந்தாவில் நின்று கொண்டிருந்தார். அப்போது மதிய சாப்பாட்டு வேளை என்பதால் மாணவர்கள் அமைதியாக, சீருடை  அணிந்த படி வரிசையாக வந்தார்கள். சரியாக சட்டை அணியாத ஒரு மாணவியை லெவின் நிறுத்தி, அறிவுறுத்தி அனுப்பினார்.  

''சனிக்கிழமைகளில் இவர்கள் இங்கு காலை 9 முதல் மதியம் 1 மணி வரை இருப்பார்கள். கோடை காலத்தில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இருப்பார்கள். கோடை காலம் முடிவதற்குள் அவர்கள் மற்றவர்களைவிட மூன்று வாரங்கள் அதிகமாகப் பள்ளியில் செலவிடுவார்கள். இவர்கள் எல்லோரும் மிகவும் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள்தான் கோடை விடுமுறை அதிக நாட்களின்போது படிப் புடனான தொடர்பை இழப்பவர்கள். இதனால் கிப் அகாடமியில் அதிக நாட்களுக்கு கோடை விடுமுறை விடுவதில்லை'' என்று டேவிட் லெவின் விளக்கினார்.
'ஆரம்பத்தில் மாணவர் களுக்கு இது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக அவர்களுக்கு உழைப்பின் மகத்துவம் புரிந்தது. இங்கு நாங்கள் அதிகமாகப் பேசுவதே மனஉறுதி பற்றி மற்றும் சுயகட்டுப்பாடு பற்றித்தான். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு இந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் நன்றாகவே புரியும்'' என்றார் அவர்.

லெவின் எட்டாவது கிரேடு கணித வகுப்பை நோக்கி நடந்து சென்று ஆரோன் என்கிற மாணவனுக்குப் பின்னால் போய் நின்றார். அவன் சிந்தனைத் திறன் சம்பந்தப்பட்ட கணக்கு ஒன்றைப் போட்டுக் கொண்டிருந்தான். எல்லா கிப் மாணவர்களும் இதைத் தினமும் காலையில் செய்ய வேண்டும். போனிடெயிலுடன் கிட்டத் தட்ட முப்பது வயது மதிக்கத்தக்க வகையில் இருந்த ஆசிரியர் ஃபிராங் கோர்கோரன் அவ்வப்போது அவர் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று அந்த மாணவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.  
இந்த மாதிரியான காட்சியை நீங்கள் அமெரிக்காவில் உள்ள வகுப் பறைகளில் பொதுவாகவே பார்க்க முடியும்தான். ஆனால் இங்கே அதில் ஒரு வித்தியாசம் - ஆரோன் வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு முன்னால் உட்கார்ந்து கணக்கு ஒன்றை மிகவும் முறையாக, கவனமாக வகுப்பில் உள்ளவர்களின் கவனிப்போடு கடந்த இருபது
நிமிடமாகச் செய்து கொண்டி ருந்தான். அந்த கணக்குக்கு விடை கண்டுபிடிப்பதுடன், விடை கண்டுபிடிக்க ஒரு வழிக்கு மேலும் வேறு இருக்கிறதா என்கிற கேள்வியையும் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தான், விடா முயற்சியுடன். வகுப்பு முடிந்தவுடன் கோர்கோரன் கூறினார். 'என்னைப் பொறுத்தவரை கணக்குப் பாடம் என்பது 'மூழ்கு அல்லது நீந்து’ என்கிற அப்ரோச்தான். எல்லாம் அதிவேகச் சுற்றுதான். யார் முதலில் விடையைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவர் களுக்கு பரிசு கொடுக்கப்படும்.
 இந்த இடத்தில்தான் கணக்கு பாடத்தை நன்றாகச் செய்யக்கூடியவர்கள் மற்றும் செய்ய இயலாதவர்கள் என்கிற உணர்வுகள் ஏற்படுகிறது. அதிகமான நேரம் கொடுக்கப் படுவதால் ஆசிரியர் கணக்கை விளக்கிச் சொல்லவும்,

மாணவர்கள் உட்கார்ந்து அதை மனதில் உள்வாங்கிக் கொள்ளவும், திரும்பச் செய்து பார்க்கவும் உதவுகிறது.

இதனால் நேரம் அதிகமாகச் செலவானாலும் அதிகமான வர்கள் நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. நானும் 'விளக்கம் கொடுப்பதால் நேரம் செலவாகிறதே' எனக் கவலைப் படுவதில்லை' என்றார்.
அந்த வகுப்பறையில் நியூயார்க் ஸ்டேட் ரீஜென்ட்ஸ் தேர்வில் கோர்கோரனின் மாணவர்கள் முதல் வகுப்பில் தேறியதற்கான சான்றிதழ்கள் டஜன் கணக்கில் தொங்கவிடப் பட்டிருந்தன. 'இந்த வகுப்பில் ஒரு மாணவி இருந்தாள். அவள் ஐந்தாம் கிரேடில் இருக்கும்போது கணக்கில் படுமோசம். ஒவ்வொரு சனிக் கிழமையும் நாங்கள் பயிற்சி கொடுக்கும்போது அவள் வெறுத்துப் போய் அழுது கொண்டு இருப்பாள். கண்ணீர் மாலை, மாலையாகக் கொட்டும். படித்து முடித்துப் போய்விட்ட அவள் எனக்கு இரண்டு வாரங் களுக்கு முன்பு இ-மெயில் அனுப்பியிருந்தாள். அதில் அவள் 'அக்கவுன்ட்ஸ்’ஸை பிரதான பாடமாக எடுத்துக் கல்லூரியில் படிப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தாள்' என்றார் பயிற்சியாளர் கோர்கோரன்.  

தோல்வியடைந்தவர்களை எல்லாம் வெற்றியடையச் செய்யும் இந்தப் பள்ளியின் அற்புதம் அமெரிக்காவில் அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு புத்தகம் எப்படியெல்லாம் 'இன்ஸ்பிரேஷன்’-யை உண்டாக்குகிறதோ, அது போலத் தான் இதுவும். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் கிப் போன்ற இடங்கள் புத்தகத் தையும் சினிமாவையும் விட மிகவும் கவர்ச்சிகரமானது ஆகும்.

மாரிட்டா சொல்வதைக் கேட்டால் அந்தக் கவர்ச்சியின் வீரியம் புரியும்..!

No comments: