அன்று
தமிழகத்தை ஆண்ட குடும்பத்தை
இன்று
அலைக்கழிக்கிறது
அலைவரிசையெனும் ஆழி!
நிதிகளைப் பெயராகக் கொண்டவர்கள்
இன்று
நீதி தேவனின் வாசலில்!
கனிவான மொழி பேசினாலும்
கருணையோடு காங்கிரசைப் பார்த்தாலும்
நிதியைப் பெயராகக் கொண்டவர்களை
கண்டு கொள்ள நாதிதான் இல்லை!
திஹார் திறந்திருக்கிறது
தினகர்களை ஆட்கொள்ள
இனி அவர்களுக்கு
சூரியோதயம்
வடக்கில்தான்!
(சித்தார்த்தன் சுந்தரம், ஜூலை 8, நேரம்: இரவு 9:50)
No comments:
Post a Comment